தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊத்துக்கோட்டையில் பலத்த மழையால் மின்சாரம் துண்டிப்பு: 50 கிராமங்கள் இருளில் மூழ்கியது: நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை

Advertisement

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் திடீரென பெய்த பலத்த மழையால் 50 கிராமங்கள் இருளில் மூழ்கியது. நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.

ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான பாலவாக்கம், தாராட்சி, தொம்பரம்பேடு, பாலவாக்கம், போந்தவாக்கம், பெரிஞ்சேரி, பெரியபாளையம், அரியப்பாக்கம், தண்டலம், சூளைமேனி உள்ளிட்ட பல கிராமங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் கூழ், தர்பூசணி, மோர், வெள்ளரிக்காய் மற்றும் குளிர்பானங்களை நாடி சென்றனர். மேலும் வெயிலால் மக்கள் பிற்பகல் 11 மணி முதல் 5 மணி வரை வெளியே வர முடியாமல் தவிர்த்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த சூறைக்காற்று வீசியது பின்னர் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடும் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது. இதனால் ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள போந்தவாக்கம், பெரிஞ்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி, கூனிப்பாளையம் போன்ற 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் குழந்தைகள், முதியவர் என பலரும் கொசுக்கடியால் கடும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் காற்று மழையால் தண்டலம், அரியப்பாக்கம், வடமதுரை, செங்காத்தாகுளம் பகுதிகளில் நெல்பயிர்கள் சாய்ந்தது. பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் மின்வாரியத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். பெரியபாளையம் பகுதியில் நேற்று அடித்த சூறைக்காற்றில் ஆர்.ஐ மற்றும் விஏஓ அலுவலகங்கள் மீது ராட்சத மரம் வேரோடு சாய்ந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.

Advertisement

Related News