தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்கா-கனடா எல்லையில் பயங்கர நிலநடுக்கம்: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு

அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் மற்றும் கனடா நாட்டின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.0 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. அலாஸ்காவின் ஜூனோ நகரில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், கனடாவின் வைட்ஹார்ஸ் பகுதியில் இருந்து மேற்கே 250 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.

Advertisement

பூமிக்கடியில் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நடுக்கம் மையம் கொண்டிருந்தது. சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவானாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதுகுறித்து கனடா இயற்கை வளத்துறையின் நிலநடுக்கவியல் ஆய்வாளர் அலிசன் பேர்ட் கூறுகையில், ‘மலைப்பாங்கான மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளின் சுவர்கள் மற்றும் அலமாரிகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. அதிர்ஷ்டவசமாக கட்டிடங்களுக்கு எந்தவிதமான கட்டமைப்பு பாதிப்புகளோ அல்லது உயிர் சேதங்களோ ஏற்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement