Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

அமெரிக்க ஆய்வகத்தில் பாலியல் முறைகேடு புகாரால் இந்திய விஞ்ஞானி விலகல்

வாஷிங்டன்: அமெரிக்க ஆய்வகத்தில் பாலியல் முறைகேடு புகாரை தொடர்ந்து இந்திய விஞ்ஞானி விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியான சச்சிதானந்த பாண்டா, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ‘சல்க்’ நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். அவர் மீது பாலியல் முறைகேடு புகார் எழுந்தது.

அவரது ஆய்வகத்தில் பணிபுரிந்த பெண் ஆராய்ச்சி உதவியாளர் ஒருவர் முன்வைத்த பணியிட முறைகேடு புகார் தொடர்பாக ‘சல்க்’ நிறுவனம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது நிர்வாக ரீதியான விடுப்பில் சச்சிதானந்த பாண்டா வைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அந்தப் புகழ்பெற்ற ஆராய்ச்சி மையத்தில் அவர் வகித்து வந்த 22 ஆண்டுகாலப் பணியில் இருந்து விலகினார். முக்கிய உயிரியலாளரான சச்சிதானந்த பாண்டா வரும் ஆகஸ்ட் 13 அன்று தனது பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகவுள்ளார்.