தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கிரசில் நகர்ப்புற நக்சல்கள்: பிரதமர் மோடி கடும் தாக்கு

Advertisement

வாஷிம்: காங்கிரஸ் கட்சியை நகர்ப்புற நக்சல்கள் இயக்குகின்றன என பிரதமர் மோடி கடுமையாக தாக்கி பேசி உள்ளார். மகாராஷ்டிராவுக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒருநாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று மகாராஷ்டிரா சென்றார். அங்கு வாஷிம் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத்துறை தொடர்பான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஆங்கிலேய ஆட்சியை போல் காங்கிரசும் தலித், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினரை சமமாக கருதவில்லை. இந்தியாவை ஒரே குடும்பம் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.

அதனால்தான் இந்தியாவின் கலாச்சார, பாரம்பரியத்தை வளப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி உள்ள பஞ்சாரா சமூகத்திடம் காங்கிரஸ் எப்போதும் இழிவான அணுகுமுறையை கொண்டுள்ளது. இந்தியா மீது நல்லெண்ணம் இல்லாதவர்களுடன் காங்கிரஸ் எந்தளவுக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதை நாம் பார்க்க முடியும். சுயநலத்துக்காக ஏழைகளை கொள்ளையடித்த காங்கிரஸ், அனைவரும் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்க வேண்டும் என நினைக்கிறது. மக்களை பிளவுப்படுத்த மட்டுமே தெரிந்த காங்கிரஸ் நகர்ப்புற நக்சல் கும்பல்களால் இயக்கப்படுகிறது. மக்கள் அனைவரும் விழிப்புடன், ஒன்றுபட்டு இருந்தால் காங்கிரசை முறியடிக்க முடியும். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தையும், பாசன திட்டங்களையும் ஊழலுக்காக பயன்படுத்தின” என்று இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 

Advertisement

Related News