தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உபியை உலுக்கும் சீரியல் கில்லர் புடவையால் கழுத்தை நெரித்து 13 மாதங்களில் 9 பெண்கள் கொலை: 300 போலீஸ், 14 குழுக்கள் அமைத்தும் கண்டுபிடிக்க முடியாமல் திணறல்

Advertisement

பரேலி: உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியின் கிராமப் பகுதியில் கடந்த 13 மாதங்களில் ஒரே வயதுடைய ஒன்பது பெண்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான முறையில் கொலை செய்யப்பட்டனர். குறிப்பாக கொல்லப்பட்ட பெண்கள் அனைவரும் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டனர். அவர்கள் கட்டியிருந்த சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டு இருந்தனர். பரேலியில் உள்ள ஷாஹி, ஷீஷ்கர் மற்றும் ஷெர்கர் காவல் நிலையப் பகுதிகளில் கடந்த ஆண்டு 40முதல்65 வயதுக்குட்பட்ட 8 பெண்கள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பெண்களின் சடலங்கள் அங்குள்ள கரும்பு வயல்களில் ஆடைகள் களைந்த நிலையில் காணப்பட்டன, ஆனால் பாலியல் வன்கொடுமைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அடுத்தடுத்து மூன்று கொலைகளும், ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் தலா ஒரு கொலையும், நவம்பரில் இரண்டு கொலைகளும் நடந்தன. இதை தொடாந்து 300 போலீஸ்காரர்களைக் கொண்ட கூடுதல் படை, சீருடை அணிந்த மற்றும் சாதாரண உடையில் அதிகாரிகள் 14 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

ஆனால் கொலைகாரனை பிடிக்க முடியவில்லை என்றாலும், உடனடி கொலை எதுவும் நடக்கவில்லை. ஆனால் கடந்த ஜூலை மாதம்2ம் தேதி ஷெர்கரில் உள்ள புஜியா ஜாகிர் கிராமத்தில் வசித்த 45 வயதான அனிதா, பதேகஞ்சின் கிர்கா கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற போது கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இது உபி போலீசாருக்கு பெரிய தலைவலி ஏற்படுத்தியது. இதையடுத்து மூன்று ஓவியங்களை தற்போது போலீசார் வெளியிட்டு சீரியல் கில்லரை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

Advertisement

Related News