தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உ.பி. மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து

Advertisement

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார் 18 மற்றும் 19 இடையே திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்புஏற்பட்டது.

செக்டார் 18 மற்றும் 19 க்கு இடையில் பல பந்தல்கள் திடீரென தீப்பிடித்தன. இந்த சம்பவத்திற்கு ஷார்ட் சர்க்யூட் மின்னழுத்தம் காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால், தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மாலை 5:45 மணியளவில் செக்டார் 19 ல் உள்ள மோரி மார்க்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வாகனங்கள் 10 நிமிட போராட்டங்களுக்கு பின் தீயணைக்கப்பட்டது. நல்வாய்ப்பாக இந்த தீ விபத்தால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. இருப்பினும் இந்த தீ விபத்து காரணமாக, அயோத்தி தாமின் லவ்குஷ் ஆசிரமம் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.

கடந்த சில நாட்களில் மஹாகும்பமேளா பகுதியில் நடந்த நான்காவது தீ விபத்து இதுவாகும். பிப்ரவரி 7 ஆம் தேதி, செக்டார் 19 இல் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அதில் பல கூடாரங்கள் எரிந்து சாம்பலாயின. பிப்ரவரி 9ம் தேதி, சிலிண்டர் கசிவு காரணமாக செக்டார் 9 இல் உள்ள கல்ப்வாசி கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பிப்ரவரி 13 ம் தேதியும், இரண்டு வெவ்வேறு மண்டலங்களில் தீ விபத்துகள் நிகழ்ந்தன.

Advertisement