Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

அணைகளை ஒன்றிய அரசே நிர்வகிக்க வேண்டும் : அமைச்சர் நிர்மல்குமார் பேச்சால் அதிர்ச்சி

நெல்லை : உத்தரவை மதிக்காமல் இருக்கும் மாநிலங்களில், அணைகளின் நிர்வாகத்தை ஒன்றிய அரசே எடுத்து நடத்த வேண்டும் என நெல்லையில் சட்டத்துறை அமைச்சர் சிடி நிர்மல்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கர்நாடகத்தில் யார் ஆட்சி செய்தாலும் அது பாஜகவாக இருந்தாலும் சரி , காங்கிரெஸ்ஸாக இருந்தாலும் சரி அவர்களின் ஒரே நிலைப்பாடு தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் தர கூடாதுஎன்பது தான், இது போல் மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை ஒன்றிய அரசு தலையிட்டு சரியான கொள்கை முடிவு எடுத்து பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.

தண்ணீர் தர மறுக்கும் மாநிலங்களில் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என்றும் தற்போதைக்கு மேகதாது விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என்றும் தெரிவித்தார்.

அணைகளை ஒன்றிய அரசு நிர்வகிக்கும் அணை பாதுகாப்பு சட்டத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டுக்கு மாறாக அமைச்சர் நிர்மல்குமார் பேசியதால் பொது மக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.