தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசின் பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் காணாமல் போய்விட்டன: செல்வப்பெருந்தகை பேட்டி

Advertisement

சென்னை: ஒன்றிய பாஜ அரசின் பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் இந்தியாவில் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தொழிற்சங்கத்தின் 99வது செயற்குழு கூட்டம் சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் புவனேஸ்வரி நஞ்சப்பன் தலைமை தாங்கினார். மேலும் இலவச நலவாரிய பதிவு துவக்க விழாவை செல்வப்பெருந்தகை ெதாடங்கி வைத்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி: தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 2வது வாரத்தில் கூட வாய்ப்புள்ளது. அப்படி கூடினால் தொழிலாளர் பிரச்னைகள் குறித்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் இயக்கம் குரல் எழுப்பும். அமைப்பு சாரா தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் இடையே பெரிய பாகுபாடு உள்ளது. கட்டிட தொழிலாளர்களுக்கு கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கும் போது ஒரு சதவீதம் செஸ் வழங்க வேண்டும் என்பது சட்டம். இதிலும் சில இடங்களில் குறை உள்ளது. கட்டுமான தொழிலாளர்களுக்கு ஒரு சட்டம், உடல் உழைப்பு கொடுக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு சட்டம் என்று இருப்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டி மற்றும் தவறான பொருளாதார கொள்கையால் சிறு, குறு, தொழில்கள் இந்தியாவில் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டன. இதற்கு பாஜ ஆட்சியே காரணம். கூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது. இருந்தாலும் ஆட்சியில் பங்கை என்பதை எப்போதும் காங்கிரஸ் கேட்டதில்லை. கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றி அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். தமிழிசை மீது மரியாதை வைத்துள்ளோம். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசிக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்ற கூட்டத்தில் பெண் சிங்கமாக, இந்திரா காந்தியின் மறு உருவமாக பிரியங்கா காந்தி செயல்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News