தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உளுந்தூர்பேட்டை அருகே அரசு மறுவாழ்வு இல்லத்தில் பயனற்று கிடக்கும் இடத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்

Advertisement

*பொதுமக்கள்  கோரிக்கை

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர் பேட்டை அருகே அரசு மறுவாழ்வு இல்லத்தில் பயனற்று கிடக்கும் இடத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது வெள்ளையூர் கிராமம். இக்கிராமத்தில் அரசு மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1972ல் அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்கள் அளித்த பங்களிப்பு நிதியின்கீழ் தொழு நோயாளிகளுக்கான பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லம் என இந்த இல்லம் துவங்கப்பட்டது.

அன்றைய காலக்கட்டத்தில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருந்ததால் அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளுடன் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்காக மறுவாழ்வு இல்லம் துவங்கப்பட்டது. இந்த இல்லத்தில் 500க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்றனர். இதனைத் தொடர்ந்து காலப்போக்கில் தொழுநோயாளிகள் எண்ணிக்கை குறைந்த நிலையில் தற்போது அங்கு 45 நபர்கள் மட்டுமே தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மறுவாழ்வு இல்லவாசிகளுக்கு அரசு சார்பில் உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வந்தாலும் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் பண்டிகை காலங்களில் உதவி வருகின்றனர். இந்த மறுவாழ்வு இல்லம் சுமார் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடமாகவும் அதில் 14 ஏக்கர் பரப்பளவில் கட்டிடங்கள் கட்டப்பட்டு துவங்கப்பட்டது. தற்போது குறைந்த அளவிலான இல்ல வாசிகள் இருப்பதால் 3 கட்டிடங்களில் மட்டுமே தங்கி வசித்து வருகின்றனர்.

மீதமுள்ள கட்டிடங்கள் அனைத்தும் தற்போது பாழடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கடந்த காலங்களில் இந்த மறுவாழ்வு இல்லத்தில் தறிப்பட்டறை உள்ளிட்ட சுயதொழில் செய்பவர்களுக்கென தனியாக கட்டிட வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அந்த கட்டிடங்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

கடந்த 53 ஆண்டுகளாக மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வந்தாலும், தற்போது இல்லவாசிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் தேவையில்லாத கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. இதனால் இங்குள்ள தேவையற்ற கட்டிடங்களை இடித்து அரசின் மாற்று பணிக்கு பயன்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சர் வேலு மற்றும் உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன் ஆகியோர் வெள்ளையூர் அரசு மறுவாழ்வு இல்லத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தற்போது வசிக்கும் இல்லவாசிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும், தேவையற்ற கட்டிடங்கள் மற்றும் காலி இடங்களில் அரசின் பயன்பாட்டிற்கு உண்டான கட்டிட வசதிகள் ஏற்படுத்தி முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக இந்த இடத்தில் அரசு கலைக் கல்லூரி உள்ளிட்ட அரசின் பயன்பாட்டிற்கு உரிய கட்டிடங்கள் கொண்டுவர வேண்டுமெனவும் உளுந்தூர்பேட்டை பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News