தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உளுந்தூர்பேட்டை அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி அரசு பள்ளி ஆசிரியர் மனைவியுடன் கைது

Advertisement

உளுந்தூர்பேட்டை: தீபாவளி சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்த அரசு பள்ளி ஆசிரியர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எலவனாசூர்கோட்டை. இப்பகுதியில் வசித்து வருபவர் முரளிதரன் (45). இவர் நெடுமானூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது மனைவி ஜெயா (40) என்பவருடன் சேர்ந்து கடந்த ஒரு வருட காலமாக எலவனாசூர்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகளிடம் தீபாவளி சீட்டு போடுவதாக கூறி மாதந்தோறும் ரூ.1,000 வசூல் செய்து வந்துள்ளனர். அந்த பணம் தீபாவளி சமயத்தில் திருப்பி தருவதாக கூறிய இருவரும் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும் பணத்தை தராமல் பணம் கட்டியவர்களிடம் ஏமாற்றி வந்துள்ளனர்.

இது மட்டுமின்றி 50க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கியும், நகை வாங்கியும் அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் திரண்டு புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளி ஆசிரியர் முரளிதரன் மற்றும் அவரது மனைவி ஜெயா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தீபாவளி சீட்டு மோசடியில் ஈடுபட்டு ரூ.50 லட்சம் வரையில் பணத்தை வசூல் செய்து அதை திருப்பி தராமல் ஏமாற்றிய வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் மனைவியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement