உளுந்தூர்பேட்டை அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி அரசு பள்ளி ஆசிரியர் மனைவியுடன் கைது
Advertisement
இது மட்டுமின்றி 50க்கும் மேற்பட்டோரிடம் பணம் வாங்கியும், நகை வாங்கியும் அதனை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்டோர் எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் திரண்டு புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளி ஆசிரியர் முரளிதரன் மற்றும் அவரது மனைவி ஜெயா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தீபாவளி சீட்டு மோசடியில் ஈடுபட்டு ரூ.50 லட்சம் வரையில் பணத்தை வசூல் செய்து அதை திருப்பி தராமல் ஏமாற்றிய வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் மனைவியுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement