தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடன்குடி அருகே அங்கன்வாடியில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்தது

Advertisement

*குழந்தைகள் வரும் முன் நிகழ்ந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

உடன்குடி : தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி யூனியனுக்குட்பட்ட மாநாடு தண்டுபத்து ஊராட்சி அத்தியடிதட்டில் அங்கன்வாடி அமைந்துள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

வழக்கம்போல் நேற்று காலை அங்கன்வாடி மையத்தை திறப்பதற்காக பணியாளர்கள் வந்தனர். அப்போது திடீரென கட்டிடத்தின் மேற்கூரை கான்கீரிட் பூச்சுக்கள் பெயர்ந்து குழந்தைகள் அமரும் சேர்களில் விழுந்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சிக்குள்ளான பணியாளர்கள் உடனடியாக அங்கன்வாடி மையத்திற்குள் செல்லவில்லை. அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு பணியாளர்கள் தகவல் தெரிவித்து அங்கன்வாடியை மூடினர். அருகிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு நேற்று அங்கன்வாடி மையம் செயல்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement