தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சோளிங்கர் அருகே அதிரடி தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

Advertisement

*7 டூவீலர்கள் பறிமுதல்

சோளிங்கர் : திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரத்தை சேர்ந்தவர் குமார்(45). இவர் எரும்பி பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 16ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வாரச்சந்தைக்கு வந்தார்.

அவரது பைக்கை வெளியே நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சோளிங்கர் போலீசில் குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சோளிங்கர் எஸ்ஐ மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று சோளிங்கர் சுற்றுப்புற பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஐப்பேடு பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் வேகமாக வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என தெரியவந்தது.

இதையடுத்து நடத்திய தீவிர விசாரணையில், வாலிபர்கள் சோளிங்கர் அடுத்த வன்னியமோட்டூர் கிராமத்தை சேர்ந்த பவநந்தி (24), அஜித் குமார் (24) என்பதும், இவர்கள் வேலூர், அரக்கோணம், திருத்தணி,சோளிங்கர் கொண்டாபாளையம், வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் பைக்குகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்தபோலீசார் இவர்களின் வீட்டின் அருகே பதுக்கியிருந்த 7 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் 2 வாலிபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News