Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டூவீலர் மீது பஸ் மோதி தந்தை, மகள் உயிரிழப்பு

*வேடசந்தூர் அருகே சோகம்

வேடசந்தூர் : டூவீலர் மீது பஸ் மோதிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே சேடபட்டி காளாணம்பட்டியை சேர்ந்தவர் விவேக் (35). ஜேசிபி டிரைவர்.

மனைவி ஆனந்தி (28). குழந்தைகள் அஸ்வந்த் (7), சாய் அஸ்மிதா (5). நேற்று காலையில், விவேக் தனது குழந்தைகளுடன் டூவீலரில் வேடசந்தூரில் கடைவீதிக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பினார். அப்போது எதிர்திசையில் போடியிலிருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக விவேக் ஓட்டி வந்த டூவீலர் மீது பஸ் நேருக்கு நேர் மோதியது.

இதில் தலையில் படுகாயமடைந்த விவேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தைகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சாய் அஸ்மிதா சிகிச்சை பலனின்றி இறந்தார். வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். விபத்தில் தந்தை, மகள் பலியான சம்பவத்தால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.