தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாரிகள் மோதல் தீப்பிடித்து எரிந்ததில் கிளீனர் கருகி பலி 2 டிரைவர்கள் சீரியஸ்

Advertisement

செங்கம்: தர்மபுரி மாவட்டம், பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (33), மினிலாரி டிரைவர். இவர் வைக்கோல் லோடு ஏற்றி வருவதற்காக தர்மபுரியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டார். அவருடன், அதே பகுதியை சேர்ந்த கிளீனர் பிரதாப்(18) சென்றார். மினிலாரி திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பாச்சல் கிராமத்தில் உள்ள புதுச்சேரி- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சென்றது. அப்போது, எதிரே அரியலூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரிக்கு சிமென்ட் கலவை டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை அரியலூரை சேர்ந்த ரகு(40) ஓட்டிவந்தார்.

அப்போது, மினிலாரி எதிர்பாராதவிதமாக எதிரே வந்த டேங்கர் லாரி மீது நேருக்குநேர் மோதியது. இதில் இரு லாரிகளும் தீப்பிடித்து எரிந்ததில் கிளீனர் பிரதாப் கருகி பலியானார். படுகாயமடைந்த டிரைவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ரகு மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து பாச்சல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், அதிகாலை தூக்க கலக்கத்தில் இந்த பயங்கர விபத்து நடந்துள்ளது தெரியவந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

Advertisement

Related News