தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெடிகுண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்ட திரிணாமுல் முன்னாள் எம்எல்ஏ கைது: என்ஐஏ அதிரடி

 

Advertisement

கொல்கத்தா: பன்கர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சவ்கத் மொல்லாவை என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் தட்சின் பாமுனியா கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலியானார்; 3 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குண்டு தயாரிப்பவர்களை அழைத்துச் சென்ற கார் டிரைவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 2016 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கேனிங் பூர்பா தொகுதியில் வெற்றி பெற்ற திரிணாமுல் முன்னாள் எம்எல்ஏ சவ்கத் மொல்லாவின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையிட்டு வந்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த சவ்கத் மொல்லாவை நேற்று இரவு என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான முன்னாள் எம்எல்ஏவை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கொல்கத்தாவின் சிங்ரிகாட்டா பகுதியில் அவர் தங்கியிருந்தபோது பிடிபட்டதாக அவரது மகள் தெரிவித்துள்ளார். முன்னதாக சவ்கத் மொல்லாவை தேடப்படும் நபராக அறிவித்த சில மணி நேரங்களிலேயே அவர் பிடிபட்டுள்ளார். கைதான அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

 

Advertisement

Related News