தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி அருகே இளம்பெண் பலாத்கார கொலை: கொலையாளியை கைது செய்யக்கோரி 50 கிராம மக்கள் மறியல் போராட்டம்

சமயபுரம்:திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் 30ம்தேதி இரவு இளம்பெண், தனது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள மாட்டு கொட்டகைக்கு மாட்டுக்கு வைக்கோல் போட சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் 1ம்தேதி மதியம் சிறுகளப்பூர் ஏரியின் தண்ணீர் பகுதியில் உள்ள முட்புதரில் நிர்வாண கோலத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.

Advertisement

திருச்சி எஸ்பி டோங்ரோ பிரவீன் உமேஷ், லால்குடி டிஎஸ்பி ராஜமோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சிறுகளப்பூர் பகுதிகளில் உள்ள கிரஷர் நிறுவனங்கள் மற்றும் காற்றாலை நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். ஆனால் இதுவரை கொலையாளிகள் சிக்கவில்லை.

இந்நிலையில் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சிறுகளப்பூர், பெருகளப்பூர், அருந்தலைப்பூர், நம்புக்குறிச்சி, ஊட்டத்தூர், பி.கே.அகரம், தாத்தம்பட்டி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 2,000 பேர் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை நெடுங்கூரில் நேற்று காலை 9.50 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருவழிகளிலும் சாலையில் அமர்ந்து மக்கள் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ், லால்குடி டிஎஸ்பி ராஜமோகன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எஸ்பி, ஒரு வாரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News