தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி அருகே சேர்ந்து வாழ மறுக்கும் காதல் கணவர் வீட்டு முன் இளம்பெண் தர்ணாவால் பரபரப்பு

Advertisement

திருவெறும்பூர் : திருவெறும்பூர் அருகே காதல் கணவனை தன்னோடு சேர்த்து வைக்க கோரி, கணவன் வீட்டு முன்பு பொறியியல் பட்டதாரி மாணவி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி ஏர்போர்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி.

இவர் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் இறுதி ஆண்டு விடுதியில் தங்கி படித்து வருகிறார். அதே கல்லூரியில், எம்பிஏ பட்டதாரியான திருவெறும்பூர் கணேசபுரத்தை சேர்ந்த பாபுராஜ் என்பவரை காதலித்துள்ளார்.

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் பொன்மலையில் உள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு, பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

அங்கு இருதரப்பு பெற்றோர் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதில் பாபுராஜின் பெற்றோர் மகனை ஏற்க மறுத்ததாகவும், திருமண வாழ்க்கையில் எந்த தலையீடும் செய்யமாட்டோம் எழுதி கொடுத்து விட்டு சென்றதாகவும், அதே போல் ரேவதி பெற்றோர் இவர்களை ஏற்று கொண்டதாவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தஞ்சாவூரில் உள்ள நிறுவனத்திற்கு வேலைக்கு சென்ற பாபுராஜ், ரேவதியுடன் போனில் பேசுவதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வந்துள்ளார் எனவும், நேரில் வந்து சந்திப்பதாகவும் கூறிவிட்டு செல்போனை ஸ்விட் ஆப் செய்ததாக ரேவதி தெரிவித்தார்.

அதன் பிறகு பாபுராஜை தொடர்பு கொள்ள முடியாமல் போனதால் பாபுராஜ் மீது ரேவதி பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் அவரை வரவழைத்து விசாரணை நடத்தி தாலி கட்டி விட்டு பெண்ணை ஏமாற்றியதாக பாபுராஜ் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் பாபுராஜின் பெற்றோர் அவரை பிணையில் எடுத்துள்ளனர். இதையறிந்த ரேவதி, கணவன் பாபுராஜ் வீட்டிற்கு சென்று, தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கேட்டுகொண்டார். சிறைக்கு அனுப்பியதால், விவகாரத்து செய்ய போவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலை பாபுராஜ் வீட்டு முன் தர்ணா போராட்டத்தை துவங்கினார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த திருவெறும்பூர் போலீசார் மற்றும் பொதுமக்கள் ரேவதியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, போலீசார் சமாதானத்தையடுத்து போராட்டத்தை கைவிட்டு, வீட்டிற்கு சென்றார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News