தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முப்படைகளின் திரிசூல் பயிற்சி நிறைவு ஐஎன்எஸ் விக்ராந்தில் சென்று முப்படை கமாண்டர்கள் ஆய்வு

போர்பந்தர்: முப்படைகளின் திரிசூல் பயிற்சியை விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் சென்று முப்படைகளின் தளபதிகளும் ஆய்வு செய்தனர். இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து ஒரே நேரத்தில் திரிசூல் என்ற பெயரில் போர் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டன. தார் பாலைவனம் முதல் கட்சி பகுதி வரை முப்படைகளும் கடந்த இரண்டு வாரங்களாக இந்த பயிற்சியில் ஈடுபட்டு வந்தன.30ஆயிரம் ராணுவ வீரர்கள், ஏராளமான போர் விமானங்கள், கடற்படையின் சுமார் 25கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் இதில் பங்கேற்றன.

Advertisement

சவுராஷ்டிரா கடற்கரையில் நேற்று இந்த கூட்டுப்பயிற்சியானது முடிவடைந்தது. இந்த பயிற்சியானது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் முழு அளவிலான நிலம், கடல், வான் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துகின்றது. மேலும் பல களங்களில் ஆயுதப்படைகளின் சக்தி, திறனை அடிக்கோடிட்டு காட்டுகின்றது. திரிசூல் பயிற்சியானது கூட்டுத்தன்மை, ஆத்மநிர்பர் மற்றும் புதுமை பற்றிய ஆயுதப்படைகளின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக உள்ளது. மின்னணு பேர் முதல் டிரோன் எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட களங்களை இந்த பயிற்சி உள்ளடக்கியது. இறுதி பயிற்சி மற்றும் ஒத்திகைக்காக குஜராத்தின் போர்பந்தரில் மேடை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் ஒத்திகை நடத்தப்பட்டது.

ராணுவத்தின் தெற்கு கமாண்ட், கடற்படையின் மேற்கு கடற்படை கமாண்ட் பிரிவு, விமானப்படையின் தென்மேற்கு கமாண்ட் பிரிவு ஆகியவற்றின் தலைவர்கள் கூட்டாக கள நடவடிக்கைகளை கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் சென்று ஆய்வு செய்தனர். புதிய ஆயுதங்கள், ராணுவ உபகரணங்கள் மற்றும் நடைமுறைகள் இந்த பயிற்சியின்போது சோதிக்கப்பட்டன மற்றும் திரிசூல் பயிற்சி செயல்பாடு அவற்றை உறுதிப்படுத்தியதாகவும், எதிர்கால சவால்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் லெப்டினன்ட் ஜெனரல் சேத் தெரிவித்துள்ளார்.

Advertisement