தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டால் மின்னணு இயந்திரங்கள் வேண்டாம்: தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

Advertisement

புதுடெல்லி: வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டால் மின்னணு இயந்திரங்களை தேர்தலில் பயன்படுத்தக்கூடாது என்று ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல் தற்போது நடந்து முடிந்தது. இதில் மின்னணு இயந்திரங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்தநிலையில் போர்டோரிகா நாட்டில் இவிஎம் வழியாக நடந்த தேர்தலில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், மின்னணு இயந்திரங்களை இனிமேல் தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று டிவிட்டர், டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்தார். இதையடுத்து இந்தியாவிலும் மின்னணு இயந்திரங்கள் தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இவிஎம்களின் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை பயன்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கருப்பு பெட்டி. எனவே நமது தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை குறித்து தீவிர கவலைகள் எழுப்பப்பட்டு வருகிறது. அதை யாரும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஜனநாயக நாட்டில் அரசு நிறுவனங்கள் கைப்பற்றப்படும்போது, ​​பொது மக்களுக்கு வெளிப்படையான தேர்தல் செயல்முறைகளில் மட்டுமே பாதுகாப்பு உள்ளது. எனவே மின்னணு இயந்திரங்கள் மற்றும் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை தேர்தலில் பயன்படுத்துவதில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் கூறுகையில்,’ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தவறு செய்ய முடியாதவை என்று கருதும் முன், தேர்தல் முழுவதும் எத்தனை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன என்பது குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். பொது மக்களுக்குத் தெரிந்துகொள்ளும் உரிமை இருப்பதால், தேர்தல் ஆணையம் இந்த தகவல்களை வெளியிடும் என்று நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement