தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அலுவலர்கள் அணுகல் தன்மை குறித்து பயிற்சி

Advertisement

*மாவட்ட கலெக்டர் அருணா துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், பல்வேறு துறையின் மாவட்ட நிலை அலுவலர்களுக்கான அணுகல் தன்மை இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் குறித்த ஒரு நாள் பயிற்சியினை, மாவட்ட கலெக்டர் அருணா துவக்கி வைத்தார்.

பின்னர் கலெக்டர் அருணா பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வினை முன்னேற்றும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்குதல், அரசு நலத்திட்ட உதவிகள் சென்று சேர்ந்திடும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், பல்வேறு துறையின் மாவட்ட நிலை அலுவலர்களுக்கான அணுகல் தன்மை 2021 -ன் இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ், உலகளாவிய அணுகலுக்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகளின் அடிப்படையில் அணுகல் தன்மை குறித்து அரசு அலுவலர்கள், அரசு பொறியாளர்கள் மற்றும் தனியார் கட்டுமான சங்க பொறியாளர்களுக்கு அக்லுட் இன்ஜினியரிங் அமைப்பு மூலமாக பயிற்சி வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற வீட்டுவசதி மேம்பாட்டு வாரியம், பொறியாளர்கள், தனியார் கட்டுமான சங்க பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். எனவே, இப்பயிற்சியினை நல்ல முறையில் மேற்கொண்டு சிறப்பான பணிகளை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது எனவும் தெரிவித்தார்.

Advertisement