தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயிலில் தவறவிட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு: ஊழியருக்கு பாராட்டு

Advertisement

திருவொற்றியூர்: சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் தவறவிட்ட நகை, உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நகையை நேர்மையாக ஒப்படைந்த ரயில்வே ஊழியரை பாராட்டிய பயணி அவருக்கு நன்றி தெரிவித்தார். பெங்களூருவில் இருந்து கடந்த மாதம் 29ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில், நடைமேடை ஒன்றில் பயணிகளை இறக்கிவிட்டு சுத்தம் செய்யப்படுவதற்காக புறப்பட்டுச் சென்றது. ரயிலில் ஊழியர் கார்த்தி என்பவர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது இ-1 கோச்சில் இருக்கை எண் 12ல் ஹேண்ட் பேக் ஒன்று இருந்தது. அதை எடுத்துப் பார்த்தபோது அதில் தங்க நகை இருப்பது தெரியவந்தது. அதனை சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அதனைப் பெற்றுக்கொண்டு அந்த நகை யாருடையது என விசாரணை நடத்தினர். இதனிடையே, பல்லாவரம் கலோரியா ரெசிடெண்ட் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (51) என்பவர், சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தன்னுடைய மனைவியுடன் பெங்களூருவில் இருந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்ததாகவும், ரயிலில் இருந்து இறங்கியபோது தனது மனைவி ஹேண்ட் பேக்கை மறந்துவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார். அவர் கூறிய அடையாளங்கள் பொருந்திய காரணத்தால் ரயில்வே போலீசார் நகையை அவரிடம் ஒப்படைத்தனர். அதில் 2 வளையல்கள், ஒரு செட்டு கம்மல், ஆரம் ஒன்று, நெக்லஸ் ஒன்று என மொத்தம் 9 சவரன் தங்க நகை இருந்தது. தொடர்ந்து நகையை பெற்றுக்கொண்ட ஸ்ரீகாந்த், ரயில்வே போலீசாருக்கும், ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொடுத்த ஊழியருக்கும் நன்றி தெரிவித்தார்.

Advertisement

Related News