தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழக மீனவரை தடுக்க கடலில் ரோந்து அதிகரிப்பு: இலங்கை மிரட்டல்

Advertisement

கொழும்பு: தமிழக மீனவர்களை தடுக்க சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இலங்கையில் சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது. மேலும், அவர்களின் மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி 28ம் தேதி இலங்கையின் டல்ப்ட்ட தீவுக்கருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஐந்து பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்திடம் ஒன்றிய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தது. மேலும இருநாடுகளிடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இலங்கையின் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தகவல் தொடர்பு அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ச நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “இருநாட்டு மீனவர்களும் ஒருவரது கடல் எல்லைக்குள் அடிக்கடி அத்து மீறி நுழைந்து கைது செய்யப்படுகின்றனர். இதனை தடுக்க இலங்கையின் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்து மீறி நுழைபவர்கள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள். மீனவர்கள் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Advertisement