தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் சுரக்காய் விலை குறைவு

Advertisement

திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் விவசாயிகளிடமிருந்து நேரிடையாக தோட்டங்களுக்கே செல்லும் வியாபாரிகள் காய்கறிகளை மொத்த விலைக்கு வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தின் கோவில்வழி, அவிநாசிபாளையம், பொங்கலூர், குண்டடம், மூலனூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகாள் குறுகிய காலத்தில் பயன் தரக்கூடிய வகையிலான பயிரான சுரைக்காய் சாகுபடியில் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.

கொடி வகைப்பயிரான சுரைக்காய் வேகமாக வளரக்கூடியது. மேலும், பயிரிடப்பட்டு 30 நாட்களுக்குள் காய்ப்பு திறனுக்கு வருகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்யலாம், 90 நாட்கள் வரை பலன் தரக்கூடியது என்பதால் ஏராளமான விவசாயிகள் சுரைக்காய் சாகுபடி செய்ததன் விளைவாக கடந்த மாதம் முதல் சுரைக்காய் வரத்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து 15 கிலோ எடைகொண்ட சுரைக்காய் பை ஒன்று ரூ.50 முதல் ரூ.100 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. எதிர்பார்த்த விலை இல்லாததால் நஷ்டத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெருவித்தனர்.

Advertisement

Related News