Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருப்பூரில் 5 மாதங்களுக்கு பிறகு நூல் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்வு

திருப்பூரில் 10,000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அது தொடர்பான ஜாப் ஒர்க்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டுவருகிறது. பின்னலாடை தயாரிப்புக்கு நூல் மிக முக்கிய மூலப்பொருளாக இருந்துவருகிறது. நிறுனத்தினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன் அதற்கு ஏற்றவாறு நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரித்து வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். நூல் விலை மற்றும் மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் முதல் தொடர்ந்து 5 மாதங்களாக நூல் விலை உயர்த்தப்படாமல் சீறாக இருந்தது. இந்த நிலையில் தற்போது நடப்பு மாத்திற்காக நூல் விலையை நூற்பாலைகள் அறிவித்துள்ளது. அதில் அனைத்து வித ரகங்களுக்கும் கிலோ ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் பஞ்சுக்கு 11 சதவீதம் ஒன்றிய அரசு வரி விதித்துவந்தது. அமெரிக்காவின் வரிவிதிப்பால் நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட போது சுமார் 5 மாதங்களுக்கு 11 சதவீத வரிவிதிப்பை நிறுத்திவைத்திருந்தனர். இந்த வரிவிதிப்பு தளர்வு கடந்த டிசம்பர் மாதத்துடை நிறைவடைந்த நிலையில் வரிவிதிப்பு தளர்வு நீட்டிக்கபடாததால் கடந்த ஜனவரி மாதம் முதல் வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாகவும், இந்தியாவில் தரமான பஞ்சு தட்டுப்பாடு காரணமாகவும் தற்போது நூல் விலை அதிகரித்துள்ளது.