தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி புனிதமான ஆன்மீக தலம்; சனாதன பாதுகாப்பு வாரியம் அமைக்க நேரம் வந்துவிட்டது: எக்ஸ் தளத்தில் பவன்கல்யாண் பதிவு

திருமலை: சனாதன பாதுகாப்பு வாரியம் அமைக்க நேரம் வந்துவிட்டது என்று ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாண் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: உலகளாவிய இந்து சமூகத்திற்கு, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒரு புனித யாத்திரை மையமாகும். இது ஒரு புனிதமான ஆன்மீக தலம். திருப்பதி லட்டு வெறும் இனிப்பு மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சிபூர்வமானது. அதை நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பக்தியுடன் வழங்குகிறோம். ஏனெனில் அது அனைவரது கூட்டு நம்பிக்கையையும் ஆழ்ந்த பக்தியையும் உள்ளடக்கியது.

Advertisement

சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 2.5 கோடி பக்தர்கள் திருமலைக்கு வருகிறார்கள். சனாதனர்களின் உணர்வுகள் மற்றும் நடைமுறைகள் கேலி செய்யப்படும்போது அல்லது குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படும்போது, அது வெறும் புண்படுத்தும் விஷயமல்ல. அது உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையையும், பக்தியையும் சிதைக்கிறது. மதச்சார்பின்மை இருவழிப்பாதையாக இருக்க வேண்டும். நமது நம்பிக்கைக்கான பாதுகாப்பு மற்றும் மரியாதையை பேச்சுவார்த்தை மூலம் தீர்மானிக்க முடியாது.

நமது சனாதன தர்மம் பழமையான மற்றும் எப்போதும் வளர்ந்து வரும் நாகரீகங்களில் ஒன்றாகும். மேலும் சனாதன தர்ம பாதுகாப்பு வாரியத்தை நிறுவ வேண்டிய நேரம் இது. ஒருமித்த கருத்துடன் இதை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement