தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது கூடுதல் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு

Advertisement

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 4ம்தேதி முதல் 12ம்தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இவற்றை செயல்அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் செயல்அதிகாரி வெங்கய்யசவுத்ரி ஆகியோர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது செயல் அதிகாரி ஷியாமளாராவ், பிரம்மோற்சவத்தில் 8ம்தேதி கருடசேவையன்று கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருமலையில் தற்போது பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 11 ஆயிரம் வாகனங்களை நிறுத்த போதுமான இடம் உள்ளது. இருப்பினும் கருட சேவைக்கு கூடுதல் வாகனங்கள் நிறுத்த திட்டங்களை தயாரிக்க வேண்டும். பாதுகாப்பு, கூடுதல் பணியாளர்கள், சிசிடிவி மற்றும் கூடுதல் லக்கேஜ் சென்டர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். போதுமான லட்டுகள் நிலுவை வைப்பது, சிறந்த கலைக்குழுக்கள் தேர்வு, கூடுதல் கழிப்பறைகள் போன்றவற்றின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.

12 மணி நேரம் காத்திருப்பு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 60,694 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27,350 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.78 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை முதல் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 13 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசிக்க வேண்டியுள்ளது. ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

Advertisement

Related News