தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி அலிபிரியில் சிக்கன் குழம்பு சாப்பிட்ட 2 ஊழியர்கள் டிஸ்மிஸ்

திருமலை: திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் சிக்கன் குழம்பு சாப்பிட்ட தேவஸ்தான தற்காலிக ஊழியர்கள் 2பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைந்துள்ள திருமலை மற்றும் மலைப்பாதை, திருப்பதி அலிபிரி உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி உணவுகள், மதுபானம், போதைப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய, பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பொருட்கள் மலைக்கு கொண்டு செல்வதை தடுக்க அலிபிரியில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் திருப்பதி அலிபிரியில் தூய்மைப்பணியில் ஈடுபடும் பெண்கள் உள்ளிட்ட ஊழியர்கள் வழக்கம்போல் கடந்த 9ம் தேதி மதியம் உணவு சாப்பிட்டுள்ளனர். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்களது, வீட்டில் இருந்து சிக்கன் குழம்பு எடுத்து வந்து சாப்பிட்டுள்ளனர். இதனை அவ்வழியாக பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களான நீங்களே மாமிச உணவு சாப்பிட்டால் எப்படி? என கேள்வி எழுப்பினர்.

பின்னர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ வைரலானது. இதையடுத்து, சிக்கன் குழம்பு சாப்பிட்ட தேவஸ்தான ஒப்பந்த ஊழியர்களான ராமசாமி, சரசம்மா ஆகிய 2 பேர் மீது திருமலை 2வது டவுன் போலீசில் தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்நிலையில் தேவஸ்தான விதிகளை மீறி நடந்து கொண்ட 2 ஒப்பந்த ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்கி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement