தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயில் தெப்பகுளத்தில் இன்று முதல் பக்தர்கள் நீராட அனுமதி: தேவஸ்தானம் அறிவிப்பு

Advertisement

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்பகுளத்தில் இன்று முதல் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கு முன்பு தெப்பகுளத்தில் உள்ள நீர் முழுவதும் அகற்றப்பட்டு குழாய்கள் மற்றும் தெப்பகுளத்தில் பழுது பார்க்கும் பணி ஒரு மாதம் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டு பிரம்மோற்சவம் அக்டோபர் 4 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனையொட்டி ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் தெப்பகுளத்தில் பக்தர்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டு சுத்தம் செய்து பழுது பார்க்கும் பணி நடைபெற்றது. அந்த பணிகள் முடிந்து மீண்டும் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் பக்தர்கள் தெப்பக்குளத்தில் புனித நீராட அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் சகஸ்கர தீப அலங்கார சேவைக்கு பிறகு தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாட வீதி உலா பின்பு புஷ்கர ஆரத்தி இன்று முதல் மீண்டும் தொடங்கப்படுகிறது என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.53 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமையான நேற்று 81,207 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 31,414 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் 4.53 கோடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 5 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 8 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பின்னர் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்தனர்.

Advertisement

Related News