தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு இளைஞர்கள் லட்சியத்தை அடைந்து உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும்

Advertisement

*எஸ்பி பேச்சு

திருப்பதி : இளைஞர்கள் லட்சியங்களை ஒழுக்கத்துடன் அடைந்து உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என எஸ்பி பேசினார். திருப்பதி பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகத்தில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி எஸ்பி சுப்பா ராயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை எஸ்பி தொடக்கி வைத்து பேசியதாவது:

சமீப காலமாக இணையம், ஸ்மார்ட் மொபைல், கம்ப்யூட்டர் போன்றவை நமது அன்றாட வாழ்க்கையின் அங்கமாகிவிட்டன. இவை இல்லாமல் ஒரு நாளை நாம் கடப்பது கடினம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள், மக்களை எளிதில் ஏமாற்றி, பணத்தை கொள்ளையடித்து, தீவிர உளவியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, ஏமாற்றி வருகின்றனர்.

மாணவர்களாகிய உங்களுக்கு இதுபோன்ற சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால், சைபர் குற்றங்களை ஒழிக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன், உங்கள் சகாக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள்.

சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சைபர் குற்றங்களில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதை அறிந்த படித்த இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், உழைக்கும் மக்கள், முதியவர்கள் என அனைவரும் இந்த வலையில் விழுந்து ஏமாந்து போவது மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.

சைபர் கிரைம் வழக்கில் எப்படி அணுகி நீதி பெறுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு வாரத்துக்கு மாவட்டம் முழுவதும் சைபர் கிரைம் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்த முடிவு செய்துள்ளோம். ஆன்லைன் வேலைகள், பகுதி நேர வேலைகள், ஆதார் கார்டு அப்டேட், வங்கி கேஒய்சி அப்டேட் போன்றவைகைகள் மூலம் சைபர் கிரிமினல்கள் நம் அடையாளத்தைப் பயன்படுத்தி நம்மை சிக்க வைக்கின்றனர்.

இளைஞர்கள் தான் நாட்டின் முதுகெலும்பு, எனவே உங்கள் லட்சியங்களை ஒழுக்கத்துடன் அடைந்து எதிர்காலத்தில் உயர்ந்த நிலையை அடையுங்கள். இளைஞர்கள் நன்றாக இருந்தால், மாநிலம் நன்றாக இருக்கும், நாடு நன்றாக இருக்கும், அதன் விளைவாக சமுதாயம் நன்றாக இருக்கும் சமீப காலமாக, பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களை குறிவைத்து கஞ்சா போன்ற சட்டவிரோத போதைப்பொருட்கள் விற்கும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக 100 அல்லது 112 என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள் அல்லது 8099999977 என்ற வாட்ஸ்அப் எண்ணில் திருப்பதி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப்பொருட்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் அளிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.

சமீப காலமாக, மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில், பெண் குழந்தைகளிடம் சிலர் கண்மூடித்தனமாக நடந்து கொள்கின்றனர். இவற்றின் மூலகாரணமாக மதுவே உள்ளது. அவற்றை விட்டு விலகி பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதில் நீங்கள் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். இவ்வாறு எஸ்பி பேசினார். இதில் பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement