தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி: தலையணையில் குளிக்க தடை நீட்டிப்பு

Advertisement

களக்காடு: திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கினர். அதே நேரத்தில் தலையணையில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. களக்காடு பகுதியிலும் மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன்காரணமாக களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தவாறு பேரிரைச்சலுடன் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதனால் தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 15ம் தேதி முதல் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நேற்று 4வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது. அதே நேரத்தில் தலையணையை சுற்றிப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோன்று திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் சாரல் மழையினால் வனப்பகுதியில் ஓடும் நம்பியாற்றிலும் நீர்வரத்து அதிகரித்ததால் அங்குள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லவும், நம்பியாற்றில் குளிக்கவும் கடந்த 15ம் தேதி முதல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று வனச்சரகர் யோகேஸ்வரன் தெரிவித்தார்.

Advertisement

Related News