தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்குறுங்குடி பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்

Advertisement

களக்காடு :களக்காடு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள திருக்குறுங்குடி பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு நஞ்சை, புஞ்சை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தோட்டப் பயிர்களும் பயிர் செய்யப்படுகிறது. பெரும்பாலும் வட கிழக்குப்பருவ மழை காலங்களில் நெல் மற்றும் வாழை பயிர்களை பயிர் செய்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால், திருக்குறுங்குடி பெரிய குளத்துப்பாசன விவசாயிகள் வயல்களில் நடுகை போடுவதற்கு முன்னேற்பாடாக வயல் வெளிகளை சமன் செய்து அதில் தண்ணீர் தேக்கி டிராக்டர் மூலம் உழவுப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.உழவு செய்த விளை நிலங்களில் நொச்சி இலை, கொலிஞ்சி இலை,வேப்ப இலைகளை அடியுரமாக போட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே நாற்றங்காலில் நாற்று பாவப்பட்டு, நாற்றுகள் வளர்ந்து, தயார் நிலையில் உள்ளதால் இன்னும் சில நாட்களில் நாற்று நடவு பணிகளும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் திருக்குறுங்குடி பகுதியை பொறுத்த வரை பருவ மழை இன்னும் வலுப்பெறவில்லை. மழை சரிவர பெய்யாததால் பெரியகுளம் உள்ளிட்ட குளங்களில் விவசாய தேவைக்கு தண்ணீர் குறைவாகவே உள்ளது. இருப்பினும் மழையை எதிர்பார்த்து பருவ நேரத்திற்குள்ளாக விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

Related News