தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்செந்தூரில் கடல் அரிப்பு: பக்தர்கள் பீதி

Advertisement

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடல் அரிப்பு ஏற்பட்டதால் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடும்படி போலீசார் அறிவுறுத்தினர். அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மட்டுமே கடற்கரையில் அமைந்துள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக வங்கக்கடலோரம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டுள்ளதால் தென் தமிழக கடற்கரையோர பகுதியில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் நேற்று திடீரென கடல் அரிப்பு ஏற்பட்டது. சுமார் 25 அடி நீளத்திற்கும், 10 அடி ஆழத்திற்கும் கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் பீதியடைந்தனர். கடலில் நீராட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் அதிகளவில் கற்கள் உள்ளதால் நீராட இயலாத சூழல் நிலவுகிறது. கடல் அரிப்பை தொடர்ந்து பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்குமாறு போலீசாரும், கடற்கரை பாதுகாப்பு பணியாளர்களும் அறிவுறுத்தினர்.

Advertisement