தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டிவனம் அருகே ரயில்வே தரைப்பாலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்: உடனடி நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்

Advertisement

திண்டிவனம்: திண்டிவனம் அருகே ரயில்வே தரைப்பாலத்தில் தண்டவாளங்களுக்கு இடையே உடைப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகி உள்ளதால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ரயில்வேதுறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த டி.கேணிப்பட்டு பகுதியில் 133வது மைல் கல் பகுதியில் 400 எண் கொண்ட சிறிய ரயில்வே தரைப்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் மேல் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே மத்தியில் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் உருவாகி அதன் வழியே கருங்கல் ஜல்லிகள் பள்ளத்தின் வழியே கீழே இறங்கி உள்ளது. தற்போது மழை காலம் தொடங்கி உள்ளதால் அப்பகுதியில் பலத்த மழை பெய்யும்போது அதன் வழியே மழைநீர் மண்ணை அரித்துக் கொண்டு சென்றால் அப்பகுதியில் பெரிய அளவில் பள்ளம் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இதனால் மண்ணரிப்பு மற்றும் ரயில்களின் வேகத்தால் ஏற்படும் அதிர்வால் அப்பகுதியில் செல்லும் தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்கும் அபாயமும் ஏற்படும். இதனால் அப்பகுதியை கடக்கும் ரயில்கள் பெரும் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இந்த ரயில் பாதை வழியாகத்தான் திருச்சிராப்பள்ளி-சென்னை மார்க்கமாக ரயில்கள் சென்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட ரயில்வேத்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அப்பகுதியில் தோன்றியுள்ள திடீர் பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை அப்பகுதியில் குறைந்த வேகத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News