தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மும்மொழி கொள்கை என்பது மோசடி கொள்கை: விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரான பின் சீமான் பேட்டி

Advertisement

விக்கிரவாண்டி: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை தொடர்பாக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார். இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் சீமான், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒன்றிய அரசு மும்மொழி கொள்கையை கடைபிடித்தால் தான் நிதி ஒதுக்குவோம் என்பது எப்படி ஜனநாயகமாக இருக்கும். மாநிலங்கள் கொடுக்கும் வரி வருவாயின் பெருக்கம்தான் ஒன்றிய அரசின் நிதி. என்னுடைய பணத்தை எடுத்து வைத்துகொண்டு பணம் கொடுக்கமாட்டோம் என்பது திமிறு. இந்தி படிக்க வேண்டும் என்ற தேவை என்ன உள்ளது.

இந்தி படித்தால் பசி, பட்டினி தீர்ந்துவிடுமா? மொழி வாரியாக தான் இந்தியா பிணைந்து உள்ளது. தாய் மொழியாக தமிழ், பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. எதனை வேண்டுமானாலும் படிப்பேன் என்பது எனது விருப்பம். மும்மொழி கொள்கை என்பது மோசடி கொள்கை. 3ம் வகுப்பில் பொதுத்தேர்வு வைக்க கூடாது. அந்த தேர்வில் தோல்வியடைந்தால் பிஞ்சு மனதில் நஞ்சு வளராதா? ஆட்சிக்கு வந்து 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்றார்கள். அதை செய்யவில்லை. இந்தி எதற்காக தேவை என்பதற்கு அண்ணாமலை ஒரு காரணம் கூற வேண்டும். இந்தி படித்தால் தான் தேசப்பற்று என்றால் அது தேச துரோகம்.

Advertisement

Related News