தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்தணி பகுதியில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து 12ம் தேதி ஆர்ப்பாட்டம்: வணிகர் சங்க கூட்டத்தில் முடிவு

Advertisement

திருத்தணி: ஜிஎஸ்டி வரிவிதிப்பை கண்டித்து திருத்தணியில் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுமென வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருத்தணியில் வணிகர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கனகராஜ் வரவேற்றார்.

ஒன்றிய அரசு கடை வாடகையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி செலுத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. மேலும் சொத்து வரியில் 6 சதவீதம் வரியை உயர்த்தியுள்ளனர். நகராட்சியில், வியாபார உரிம கட்டணம், தொழில் வரி உயர்த்தப்படுவதால், சாமானிய வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே வாடகை கடைக்கு ஜிஎஸ்டி வரி ரத்து, வரி உயர்வு திரும்ப பெற வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் சார்பில் திருத்தணியில் வரும் 12ம் தேதி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் அனைத்து வணிகர் சங்கங்களும் பங்கேற்க வேண்டும் என்று கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு மாநில துணைத் தலைவர் சீனிவாசன், மாவட்ட இணைச் செயலாளர் சுதாகர், சக்கரவர்த்தி, பிரான்சிஸ், முருகன், கமல், கோவிந்தராஜ் உட்பட ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement