தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்புவனம் அருகே டூவீலர்-போலீஸ் வாகனம் மோதல் குழந்தையுடன் பெற்றோர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே போலீசார் வந்த வாகனமும் டூவீலரும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் குழந்தையுடன் பெற்றோர் பலியாகினர். இதை கண்டித்து உறவினர்கள், கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த சிட்டம்பட்டியை சேர்ந்தவர் பிரசாத் (35). இவர் மனைவி சத்யா (25), மகன் அஷ்வின்(5) ஆகியோருடன் நேற்று சக்குடி அருகே அனஞ்சியூரில் உறவினர் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு டூவீலரில் சென்றார். பின்னர் இரவு 7.30 மணியளவில் ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அதே வாகனத்தில் சிட்டம்பட்டியை சேர்ந்த சோனைஈஸ்வரி (30) என்பவரும் உடன் வந்தார்.

Advertisement

சிவகங்கை மாவட்டம், அதிகரை அருகே சென்றபோது, எதிரே, சிவகங்கை நோக்கி சென்றுகொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் வாகனமும் டூவீலரும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரசாத், அவரது மனைவி சத்யா, மகன் அஷ்வின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் சோனை ஈஸ்வரி காலில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்தும், உடனடியாக போலீஸ் வாகன டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அப்பகுதியில் திரண்டு சுமார் ஒரு மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சிவகங்கை மாவட்ட எஸ்பி சிவபிரசாத் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த விபத்து குறித்து பூவந்தி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டன. போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

Related News