தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருமங்கலத்தில் பரபரப்பு:ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் 12வது மெயின் ரோட்டில் ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகம் இயங்கிவருகிறது. இன்றுகாலை 9 மணி அளவில், இங்குள்ள தரைத் தளத்தில் உள்ள கேண்டீனில் இருந்து புகைவந்ததுடன் சிறிது நேரத்தில் தீப்பிடிக்க ஆரம்பித்தது. இதன்காரணமாக அங்கிருந்தவர்கள் வெளியே ஓடிவந்துவிட்டனர். இதனிடையே தீ வேகமாக பரவி பெண் அதிகாரிகளின் ஓய்வறை மற்றும் மற்ற அறைகளுக்கு பரவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்புத்துறை இணை இயக்குனர் சத்யநாராயணா தலைமையில், வில்லிவாக்கம், அண்ணாநகர், ஜெ.ஜெ.நகர், கீழ்பாக்கம், அம்பத்தூர், குரோம்பேட்டை மற்றும் கோயம்பேடு பகுதிகளில் இருந்து 10 க்கும் மேற்பட்ட வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு சுமார் 3 மணிநேரம் கழித்து தீயை முற்றிலும் அணைத்தனர். இதன்பின்னர் தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கம்ப்யூட்டர்கள், ஷேர், டேபிள் மற்றும் முக்கிய ஆவணங்கள், கேண்டீனில் உள்ள பாத்திரங்கள், மின்னனு உபகரணங்கள் அனைத்து எரிந்து சேதம் அடைந்திருந்தது. தடவியல் துறை அதிகாரிகள் வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Advertisement

இதுகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர். தீயணைப்புத்துறை இணை இயக்குனர் சத்யநாராயணா கூறுகையில், ‘’ஜிஎஸ்டி ஆணையரகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட வீரர்கள் சுமார் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மின் கசிவா? சதிச் செயலா? என்று திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். விசாரணைக்கு பிறகு தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தெரியவரும்’ என்றார்.

Advertisement