தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்கழுக்குன்றம் தாலுகாவில் தொடர் கனமழையால் 2 தடுப்பணைகள் நிரம்பின

Advertisement

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் தாலுகாவில் தொடர் கனமழையால், அப்பகுதியில் உள்ள 2 தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கனமழை மற்றும் லேசான மழை பெய்து வந்தநிலையில், மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கின. மேலும், திருக்கழுக்குன்றம் தாலுகாவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 97 ஏரிகளில் பெரிய ஏரியான பொன்விளைந்த களத்தூர் ஏரி மற்றும் அம்மணம்பாக்கம், சூராடிமங்கலம், வழுவதூர், திம்மூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 34 ஏரிகள் நிரம்பியுள்ளன.

அதேபோல், தாலுகாவிற்கு உட்பட்ட பாலாற்றில் மழைநீர் அதிகரித்து ஓடுவதால், வல்லிபுரம் மற்றும் வாயலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 2 தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. காற்றின் வேகத்தால் திருக்கழுக்குன்றம் அடுத்த சாலூர் கிராமத்தில் உள்ள மின் கம்பத்தின் மேல் பக்கம் முறிந்து தொங்கிக் கொண்டிருந்தை கண்டு, அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இருளர் குடும்பங்களின் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், அவர்களை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் திருக்கழுக்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் வணிகர் சங்கம் சார்பில் பேரூராட்சி தலைவர் ஜி.டி.யுவராஜ் உணவு மற்றும் பாய், பெட்சீட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், சாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம் பகுதியில் உள்ள 67 இருளர் குடும்பங்களின் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் அவர்களை அங்குள்ள தனியார் தொண்டு நிறுவன டியுசன் சென்டரில் தங்க வைத்து, ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் ஜானகிராமன் ஏற்பாட்டில் உணவு மற்றும் பாய், கொசுவர்த்தி உள்ளிட்டவைகளை வழங்கினர்.

Advertisement

Related News