தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருக்கண்டலம் ஆனந்தவல்லி அம்பிகை கோயில் மாசி தெப்பத் திருவிழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Advertisement

பெரியபாளையம்: திருக்கண்டலம் ஊராட்சி, ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் கோயிலில் மாசி தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியத்தில் அடங்கிய திருக்கண்டலம் ஊராட்சியில் ஆனந்தவல்லி அம்பிகை சமேத திருக்கள்ளீஸ்வரர் கோயிலில் மாசி தெப்ப திருவிழா நடைபெற்றது. இதில் சுந்தர விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான் புறப்பாடு நடந்தது. மறுநாள் மாலை சுக்கிரவல்லி அம்பாள் புறப்பாடு நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை மடவிளாகம் கிராமத்தில் இருந்து தாய்வீட்டு சீதனமாக மஞ்சள், குங்குமம், வளையல், பூ, பழம், புடவை உள்பட பல்வேறு சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர், அம்பிகை சமேதராக திருக்கள்ளீஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. கோயிலின் எதிரில் உள்ள திருக்குளத்தில் வண்ணமலர்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி 9 முறை உலா வரும் தெப்பத் திருவிழா நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும், முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மதன் சத்யராஜ் ஏற்பாட்டில், கோயில் வளாகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்தியவேலு தொடங்கி வைத்தார். இதில், ஒன்றிய பொருளாளர் குப்பன், மாவட்ட பிரதிநிதி வெங்கடாசலம், மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் தியாகராஜன், நிர்வாகிகள் ஆனந்தன், சரண்ராஜ், முத்துராஜ், தினேஷ், அன்பு உள்பட ஆயிரக்கணக்கான கிராம மக்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மடவிளாகம், திருக்கண்டலம் கிராம பொதுமக்கள், பக்தர்கள், விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

Advertisement

Related News