Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் கோயிலில் வரிசையில் காத்திருந்த பக்தர் மூச்சுத்திணறி பலி

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு விடுமுறை நாளான நேற்று கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இந்நிலையில், காரைக்குடி, சொக்கலிங்கம் செட்டியார் தெருவை சேர்ந்த ஜவுளி வியாபாரி ஓம்குமார் (50) நேற்று முன்தினமே தனது குடும்பத்தார் 20 பேருடன் வந்து விடுதியில் தங்கியுள்ளார். நேற்று காலை கோயிலில் குடும்பத்தில் சிலர் முடிகாணிக்கை செலுத்தி விட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக பொது தரிசனப்பாதை, மூத்த குடிமக்கள் வழி மற்றும் ரூபாய் 100 கட்டண வழிகளில் காத்திருந்துள்ளனர். அப்போது ரூ.100 கட்டண வரிசையில் நின்றிருந்த ஓம்குமாருக்கு கூட்ட மிகுதியால் மூச்சு திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.