தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருடன் என நினைத்து கூலிதொழிலாளி கொலை: கல்லால் அடித்த 5 சிறுவர்கள் கைது

Advertisement

தென்காசி: தென்காசி அடுத்த சாம்பவர் வடகரையைச் சேர்ந்தவர் முருகன் (46). கூலி தொழிலாளியான இவர் கடந்த 15ம் தேதி இரவு 11 மணியளவில் உடையார் தெரு ரயில்வே கேட் பகுதியில், ஓடி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ட்ரம் செட் வாசிக்கும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அடங்கிய குழுவினர், அவரை வழிமறித்து திருடன் என நினைத்து சரமாரியாகத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த முருகன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய தென்காசி ரயில்வே போலீசார், தாக்குதலில் ஈடுபட்டதாக சிறுவர்கள் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் 5 பேரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டையில் உள்ள சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து தென்காசி ரயில்வே போலீசார் கூறுகையில் ‘‘ கூலித் தொழிலாளி முருகன், கையில் கொஞ்சம் பணம் வைத்திருந்துள்ளார். அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாற்று பாலினத்தவர்களிடம் இருந்து தப்பிக்கும் பொருட்டு ஓடிக் கொண்டிருந்தார். ஆனால், இதைப் பார்த்த ட்ரம் செட் வாசிக்கும் குழுவைச் சேர்ந்த சிறுவர்கள், திருட்டு அல்லது வேறு ஏதேனும் பிரச்னை காரணமாக முருகன் ஓடிவருவதாக நினைத்து கையாலும், கற்களாலும் சரமாரி தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முருகன், மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.‌ தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர் இருவர் அடங்குவர்’’ என்றனர்.

Advertisement

Related News