தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொத்து தகராறில் மோதல்; ‘லிவ்-இன்’ காதலியை கொன்ற கள்ளக்காதலன்: போதையில் கார் ஓட்ட முடியாமல் சிக்கிய விநோதம்

புதுடெல்லி: டெல்லியில் சொத்து தகராறு காரணமாக உடன் வசித்த பெண்ணைக் கொலை செய்துவிட்டு, சடலத்தை காரில் மறைக்க முயன்ற நபர், போதை அதிகமானதால் மாட்டிக்கொண்ட விநோத சம்பவம் நடந்துள்ளது. டெல்லியின் தென்மேற்குப் பகுதியான சாவ்லாவில் வீரேந்திரா என்பவர் 44 வயதுடைய பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தார். ‘லிவ்-இன்’ காதலியான அந்தப் பெண்ணுக்குச் சொந்தமான வீட்டை விற்ற பணத்தில், வீரேந்திரா தனது பெயரில் வேறு சொத்து வாங்கியதுடன், மீதமுள்ள 21 லட்சம் ரூபாயையும் தானே வைத்துக்கொண்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் 25ம் தேதி இரவு இருவரும் மது அருந்தியபோது பணப்பிரச்னை குறித்து மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வீரேந்திரா, அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.

Advertisement

கொலையை மறைப்பதற்காக வீரேந்திரா தனது மனைவி பூனம் மற்றும் மைத்துனர் சேத்தன் ஆகியோரை உதவிக்கு அழைத்துள்ளார். மூவரும் சேர்ந்து சடலத்தை காரில் ஏற்றினர். ஆனால், வீரேந்திரா அதிக போதையில் இருந்ததால் காரை 100 மீட்டர் தூரம் கூட ஓட்ட முடியாமல் நடுரோட்டில் நிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்று நிம்மதியாகத் தூங்கிவிட்டார். மறுநாள் காலையில் காரில் சடலம் இருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார், காரில் இருந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த வீரேந்திராவைக் கைது செய்தனர். விசாரணையில், பெண்ணின் சடலத்தை அப்புறப்படுத்த மனைவி மற்றும் மைத்துனர் உதவினார்கள் என்பது தெரியவந்ததை அடுத்து, அவர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement