தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேனி அருகே வீரபாண்டியில் மஞ்சள் நீராட்டுடன் கோயில் வீட்டுக்கு சென்ற கவுமாரியம்மன்: 8 நாள் நடந்த சித்திரை திருவிழா நிறைவு

Advertisement

தேனி: தேனி அருகே, வீரபாண்டியில் 8 நாள் கோலாகலமாக நடந்த சித்திரைத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று மஞ்சள் நீராடி கவுமாரியம்மன் கோயில் வீட்டுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. தேனி அருகே பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று நிறைவடைந்தது. திருவிழாவுக்காக கடந்த 16ம் தேதி கம்பம் நடப்பட்டது. இதைத் தொடர்ந்து மே 6ம் தேதி முதல் நேற்று வரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. அம்மனிடம் வேண்டுதல் செய்த பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதை தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு வகையான நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

திருவிழா நாட்களில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 9ம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து ரதவீதிகளில் வலம்வந்து நேற்று முன்தினம் நிலைக்கு வந்தது. இதையடுத்து ஊர்ப் பொங்கல் விழா நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா கம்பம் நடப்பட்டிருந்த இடத்தில் பக்தர்கள் நீர் தெளித்தனர். இத்துடன் திருவிழா நிறைவடைந்தது. சித்திரைத் திருவிழா நிறைவடைந்ததையடுத்து, இன்று காலை அம்மன் கோயில் வீட்டுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.

தொடர்ந்து மஞ்சள்நீர் தெளித்து கோயிலில் இருந்து ஊர்வலமாக வீரபாண்டி கிராமத்திற்குள் உள்ள கோயில் வீட்டிற்கு அம்மன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, வீரபாண்டி கிராமத்தில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement