Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பாமக தலைவர் அன்புமணி பேட்டி எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நேற்று வெளியாகி திமுக அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுக்கு நேர்மையான முறையில் வாக்களித்து அனைத்து வாக்காளர் நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. ஒரு பைசா செலவில்லாமல் 56 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம்.

எங்களுக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சித் தலைவர்களான அண்ணாமலை, டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணி தலைவர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார். இடைத்தேர்தலில் பாமக பணம் கொடுத்தது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளதற்கு பதில் அளித்த அன்புமணி, நாங்கள் பணம் கொடுத்ததை நிரூபியுங்கள் பார்க்கலாம். நேர்மையாக பணியாற்ற முடியாவிட்டால் தேர்தல் அதிகாரி சத்தியபிரதாசாகு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.