தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தலசீமியா பாதித்த 5 குழந்தைகளுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய கொடூரம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூமின் மாவட்டத்தின் சாய்பாசாவில் உள்ள உள்ளூர் ரத்த வங்கியில் தலசீமியா பாதித்த குழந்தைகளுக்கு ரத்த மாற்றம் செய்யப்பட்டு வந்தது. தலசீமியா என்பது ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியில் ஏற்படும் மரபணு கோளாறு. உடலில் போதுமான ஹீமோகுளோபின் உற்பத்தி செய்ய முடியாது. இதனால் இந்த நோய் பாதித்த குழந்தைகளுக்கு ரத்தம் மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்படி தலசீமியா பாதித்த 5 குழந்தைகளுக்கு சாய்பாசா ரத்த வங்கியில் சமீபத்தில் ரத்த மாற்றம் செய்துள்ளனர்.

Advertisement

அதன் பிறகு அவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் 5 பேர் கொண்ட மருத்துவ குழு விசாரணை நடத்தி, ரத்த வங்கி ஊழியர்கள் கவனக்குறைவாக எச்ஐவி பாதித்த ரத்தத்தை 5 குழந்தைகளுக்கு செலுத்தியது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து, ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் குமார் கங்க்வார் நேற்று நடந்த மாநில உதய தின விழாவில் பேசுகையில், ‘‘ரத்த மாற்ற வழக்கில் தவறுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் வெறுமே பணி இடைநீக்கம் செய்யப்படக் கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கும் அளவுக்கு வலுவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்றார்.

Advertisement

Related News