தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தளவாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் மீண்டும் பதவி வழங்கினார் எடப்பாடி பழனிசாமி

Advertisement

சென்னை: தளவாய் சுந்தரத்துக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் மீண்டும் பதவி வழங்கினார். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததால் கட்சியில் பதவி பறிக்கப்பட்ட தளவாய் சுந்தரத்துக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், டெல்லியின் தமிழக பிரதிநிதியாக பொறுப்பு வகித்தவர் தளவாய் சுந்தரம். தொடர்ந்து 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்த விவகாரத்தில் கட்சி பொறுப்பில் இருந்து கடந்த அக்.8-ல் தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டார்.

ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்துகொண்டதால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்து தலைமைக்கு தளவாய் சுந்தரம் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் தளவாய் சுந்தரத்துக்கு எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் மீண்டும் பதவி வழங்கினார். அதிமுக அமைப்புச் செயலாளராகவும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும் தளவாய் சுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 40 நாட்களில் மீண்டும் தளவாய் சுந்தரத்துக்கு அதிமுகவில் பதவி வழங்கப்பட்டுள்ளது.

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு யாரையும் இழப்பதற்கு எடப்பாடி விரும்பவில்லை என்பதால்தான் தளவாய் சுந்தரத்திற்கு இந்த பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

Related News