தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவு: ரஷ்ய அதிபர் புதின்

Advertisement

டெல்லி: தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புதின் ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில், நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, வணிகம்-இறக்குமதிகளுக்கு தடை, பாகிஸ்தான் நாட்டு கப்பல்களுக்கு இந்திய துறைமுகங்களில் தடை என அடுத்தடுத்து அதிரடிகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. அதேபோல பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க பாதுகாப்பு படைகளுக்கும் முழு சுதந்திரத்தை ஒன்றிய அரசு அளித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இந்தியாவுக்கு எதிராக கண்டபடி பாகிஸ்தான் பேசி வருகிறது. சிந்து நதியில் நீரை நிறுத்தினால் இந்தியர்களின் ரத்தம் ஓடும் என்று பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ அடாவடியாக பேசினார். அதேபோல, இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்ற ரீதியிலும் மிரட்டி வருகிறது. ஆனால், பாகிஸ்தானின் இந்த மிரட்டல்களை பொருட்படுத்தாத இந்தியா, பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுப்பதில் தீர்க்கமாக உள்ளது. தொடர்ச்சியாக பிரதமர் மோடி கடந்த இரு தினங்களாக விமானப்படை தளபதி, கடற்படை தளபதியை சந்தித்து பேசினார். பாதுகாப்புத்துறை செயலரையும் மோடி சந்தித்து இருக்கிறார்.

இந்த நிலையில், காஷ்மீரில் தீவிரவாதிகளின் கூடாரங்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகிறது. அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பின்னர்,

பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேசினார். பஹல்காம் தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் புதின் கண்டனம் தெரிவித்தார். பஹல்காம் தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவர். இந்தியா - ரஷ்யா உறவை வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் பேசி வருவதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் அறிவித்தார். இந்தியாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்க புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாகவும் தெரிவித்தார்.

Advertisement

Related News