கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி தந்தை, மகள் உள்பட 3 பேர் பலி: விருத்தாசலத்தில் சோகம்
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த முஷ்ணம் அருகே உள்ள வரதராஜன்பேட்டை பகுதியை சேர்ந்த 4 பெண்கள், 3 ஆண்கள் என 7 பேர் நேற்று முஷ்ணத்தில் இருந்து சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் தேவாலயத்திற்கு பாதயாத்திரையாக சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் விருத்தாசலம்- சேலம் புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலம் அருகே சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.



