தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தெலுங்கு படவுலகிலும் பாலியல் தொல்லை விசாரணை அறிக்கை வெளியிட வேண்டும்: சமந்தா கோரிக்கை

Advertisement

சென்னை: புதுப்பட வாய்ப்பு பெறுவது மற்றும் படப்பிடிப்புகளில் பணியாற்றுவது தொடர்பாக, கேரளாவில் மலையாள நடிகைகள் மீது மலையாள நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ள நிலையில், மலையாளப் படவுலகில் நடக்கும் பாலியல் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு ஏற்கனவே புகார் தெரிவித்த சில நடிகைகளை நேரில் சந்தித்துப் பேசியும், போன் மூலமாகப் பேசியும் வாக்குமூலம் பெற்று வழக்குப்பதிவு செய்தது. மலையாள நடிகர்கள் முகேஷ், சித்திக், ஜெயசூர்யா, மலையாள இயக்குனர்கள் ரஞ்சித், வி.கே.பிரகாஷ் உள்பட 9 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இதை முன்னணி நடிகை சமந்தா வரவேற்று தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், ‘தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பெண்களாகிய நாங்கள் ஹேமா கமிட்டியின் அறிக்கையை வரவேற்கிறோம். இதுபோலவே தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக, ‘வாய்ஸ் ஆப் வுமன்’ என்ற அமைப்பு கடந்த 2019ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மலையாளப் படவுலகைப் போலவே தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணையின் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று, தெலங்கானா அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இந்த அறிக்கையை வெளியிடுவதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல் அமையும்’ என்று சமந்தா தெரிவித்துள்ளார்.

“கடந்த 2019ம் ஆண்டில் தெலுங்கு படவுலகில் மீடூ விவகாரம் எழுந்தபோது, அதுபற்றி விசாரிக்க உயர்மட்டக்குழு ஒன்றை பாரத ராஷ்டிர சமிதி தலைமையிலான அப்போதைய மாநில அரசு அமைத்தது. இந்த உயர்மட்டக்குழு, தெலுங்கு திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை ஆராய துணைக்குழு ஒன்றை கொண்டு வந்தது. இக்குழு கடந்த 2022லேயே அம்மாநில அரசிடம் அந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையைத்தான் அரசு தற்போது வெளியிட வேண்டும் என்று சமந்தா வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Related News