தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலியல் புகார் கூறி பெண்கள் மறியல் தெலுங்குதேசம் எம்எல்ஏ உண்ணாவிரதம்

Advertisement

திருமலை : ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டம், திருவூர் தொகுதி தெலுங்கு தேச எம்எல்ஏ கோலிகபுடி சீனிவாச ராவ். இவர், பெண்களின் வாட்ஸ்அப் எண்களுக்கு ஆபாச செய்திகளை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கும்படி திருவூரு மண்டலத்தில் உள்ள சித்தேலோவில் நேற்று பெண்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கூறுகையில், `எங்களிடம் ஆபாசமாக பேசுவதுடன் தகாத கருத்துகளை எம்எல்ஏ கூறுகிறார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்’ என்றனர்.

இதையறிந்த எம்எல்ஏ கோலிகபுடி சீனிவாச ராவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் கைது செய்து தண்டனை கொடுக்க வேண்டும். இல்லையெனில் பொய் புகார் கூறுவோரை தண்டிக்க வேண்டும். இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி உடனடியாக உண்ணாவிரதம் தொடங்குகிறேன்’ என கூறி தனது அலுவலகம் அருகே தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம் தொடங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, நேரடியாக எம்எல்ஏவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எம்எல்ஏ சில விளக்கங்களை கொடுத்ததாக ெதரிகிறது. இதனை கேட்டறிந்த முதல்வர், இதுகுறித்து விசாரிக்கப்படும். எனவே உடனடியாக உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்’ என அறிவுறுத்தினார். அதன்பேரில் எம்எல்ஏ உண்ணாவிரதத்தை கைவிட்டார்.

ஏற்கனவே திருப்பதி மாவட்டம் சத்தியவேடு தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏ ஆதிமூலம் அதே கட்சியை சேர்ந்த பெண் நிர்வாகியை பலாத்காரம் செய்ததாக வந்த புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு எம்எல்ஏ மீது பாலியல் புகார் எழுந்துள்ளதால் ஆளுங்கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News